Publish Date: Thu, 02 Jan 2020 (10:21 IST)
Updated Date: Thu, 02 Jan 2020 (10:24 IST)
காலை உணவு வழங்கப்படாததால் தமிழகத்தில் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வேதாரண்யம், ஜெயங்கொண்டம், அவிநாசி, சாத்தூர், ஆரணி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.