Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோஸ்கட் செய்த விஜயபாஸ்கர்: லாவகமா நழுவிய உதயநிதி!!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (13:46 IST)
உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டை விஜயபாஸ்கர் மறுத்த நிலையில் லாவகமாக ட்விட் போட்டு தப்பியுள்ளார். 
 
இந்தியாவிலேயே கொரொனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தன் அதிகளவில் பலியாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 
 
இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதனை விஜயபாஸ்கர் மறுத்ததை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அச்செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு - தனியார் மருத்துவர் - செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும். 
 
அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நிவாரணதொகை உரியமுறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிவிக்கவேண்டும். சுகாதாரத்துறையினர் நம்பிக்கையுடன் பணியாற்ற இந்த வெளிப்படைத்தன்மை அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களின் நலனில் கழகமும் இளைஞரணியும் என்றும் அக்கறையுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments