விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாமா? வேண்டாமா? – தமிழக அரசு ஆலோசனை!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (13:39 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த முடிவுகளை எடுக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வாங்கப்பட்டு தெருக்களில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு பின்னர் ஆறுகளிலும், கடல்களிலும் கரைக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போதைய சமயம் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

சிலைகள் வாங்கி பூஜை செய்ய அனுமதித்தால் மக்கள் கூடும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாமா? கொண்டாடினால் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கொண்டாட இயலுமா என்பது குறித்து மத தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த அலோசனை கூட்டத்திற்கு பிறகு இது குறித்து முதல்வருடனான ஆலோசனை நடைபெறும் என்றும், அதன் பிறகே இதுகுறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments