தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு.. நாளை விசாரிக்கப்படுமா?

Mahendran
புதன், 17 செப்டம்பர் 2025 (17:55 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்க கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பாரபட்சம் இல்லாமல் பரிசீலிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், நீதிபதி நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 
 
எனவே, நாளை விசாரணை நடைபெறும் என்றும், விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு விஜய்யின் பிரசார பயணத்திற்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments