Publish Date: Wed, 17 Nov 2021 (07:47 IST)
Updated Date: Wed, 17 Nov 2021 (07:48 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த வாரம் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது
ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என்றும் அது மட்டுமின்றி பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது