Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேநீர் விருந்தை புறக்கணித்த கட்சிகள்! டீ செலவு மிச்சம்! – அண்ணாமலை கிண்டல்!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (11:54 IST)
ஆளுனரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கிண்டலாக பேசியுள்ளார்.

சமீப காலமாக ஆளுனர் ஆர்.என்.ரவி – திமுக அரசு இடையே பல்வேறு முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்பட்டு வந்தன. சட்டமன்றத்தில் ஆளுனர் உரையில் சில பகுதிகளை பேசாமல் விட்டதும், பாதியிலேயே சட்டசபையை விட்டு வெளியேறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல ஆளுனரின் தமிழ்நாடு என்ற பெயர் குறித்த கருத்துகளும் சர்ச்சையானது. பின்னர் இதுகுறித்து குடியரசு தலைவரிடம் மாநில அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின் டெல்லி சென்று வந்த ஆளுனர் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள குடியரசு தினத்தையொட்டி ஆளுனர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்திற்கு தமிழ்நாடு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு ஆளுனர் அழைப்பு விடுத்திருந்தார்.

ALSO READ: வீடு தேடி வரும் முக்கிய மருந்துகள்... அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டம்

ஆனால் ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக அறிவித்தது. அதை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவுத்துள்ளன.

எதிர்கட்சிகளின் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஆளுனரின் தேநீர் விருந்தை எதிர்கட்சிகள் புறக்கணிப்பதால் ஆளுனருக்கு தேநீர் செலவு மிச்சம்” என்று கூறியுள்ளார். ஆளுனரின் தேநீர் விருந்து குறித்து திமுக இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments