Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாத்துக்கும் வரி போட்டா என்ன ஆகுறது..? – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

Parliament
, செவ்வாய், 19 ஜூலை 2022 (11:04 IST)
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது போன்றவற்றை குறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு திரண்ட எதிர்கட்சிகள் கேஸ் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்திலும் இதுகுறித்து விவாதம் எழுப்ப எதிர்கட்சிகள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!