Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசைமணியை ஆசைத்தம்பியாக மாற்றிய முதல்வர் பழனிச்சாமி!

Webdunia
சனி, 30 மார்ச் 2019 (19:17 IST)
தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர் பெயரையும் சின்னத்தையும் மாறி மாறி கூறும் கூத்து இந்த தேர்தலில்தான் அதிகம் நடந்து வருகிறது. இன்று காலை கூட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னம் என்று கூறியது நெட்டிசன்களுக்கு சரியான தீனியாக இருந்தது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் ஆசைமணிக்கு வாக்கு சேகரித்து வந்தபோது ஒரு இடத்தில் ஆசைமணி என்று கூறுவதற்கு பதிலாக ஆசைத்தம்பி என்று கூறிவிட்டார். இதனால் வேட்பாளர் உள்ளிட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்
 
மேலும் முதல்வர் தன்னுடைய பிரச்சாரத்தில் அம்மாவின் ஆட்சியில் ஆறுகள் இணைக்கப்படும் என்றும், வேளாண் பெருமக்கள் இனிமேல் தண்ணீர் இல்லை என்ற நிலையே ஏற்படாது என்றும் வாக்குறுதி அளித்தார். ஆசைத்தம்பி என்பவர் கடந்த 60கள் மற்றும் 70களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதே தொகுதியில் நேற்று முன் தினம், வேட்பாளர் ஆசைமணிக்காக துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து தீவிர வாக்குவேட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments