Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரியலூர் மற்றும் நாமக்கல்லில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

அரியலூர் மற்றும் நாமக்கல்லில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!
, சனி, 4 செப்டம்பர் 2021 (10:29 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சில பகுதிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அரியலூர் இருவேறு பள்ளிகளில் தலா ஒரு மாணவிக்கும், நாமக்கல்லில் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல கடலூர் மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் பி வேலுமணியின் வங்கி லாக்கரில் சோதனை!