Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர்ந்து 45 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!

தொடர்ந்து 45 ஆயிரத்திற்கும் மேல் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
, சனி, 4 செப்டம்பர் 2021 (10:02 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,618 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907 ஆக உயர்ந்தது. புதிதாக 330 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்தது.
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,385 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,00,001 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,681 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் இதுவரை 67,72,11,205 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் தடுப்பூசிகள்!