Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளி மாணவிக்கு கொரொனா...

Advertiesment
பள்ளி மாணவிக்கு கொரொனா...
, வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:51 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 இந்நிலையில் தமிழகத்தில் ஒன்றரை வருடம் கழித்து செப்டம்பர் 1 ஆம்தேதி மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளோடு பள்ளிகள் திறக்கப்பட்டது என்றாலும் நாமக்கால் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசுப் பள்ளியி பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 எனவே, அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரொனா பரிசோதனை எடுக்கப்பட உள்ளது எனவு மேலும் அப்பள்ளி மூடப்பட்டுள்ளது.   அதேபோல் கர்நாடக மாநிலத்தில் 86 கல்லூரி மாணவிகளுக்கும் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் 30 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!