Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது – போலிஸார் விசாரணை !

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (12:21 IST)
சென்னையில் வடமாநிலத்தை சேர்ந்த  கந்தர்ப்பதாஸ் எனும் தீவிரவாதி ஒருவரைப் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலத்தில் இருந்து தப்பி வந்த தீவிரவாதி  ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். வடமாநிலத்தில் இருந்து தப்பிவந்த கந்தர்ப்பதாஸ் எனும் தீவிரவாதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக கடந்த 6 மாத காலமாகப் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று அவர் தங்கியிருந்த அறையில் உள்ளவர்களுடன் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டபோது கந்தர்ப்பதாஸ் தான் ஒரு உல்ஃபா தீவிரவாதி என்று எச்சரித்துள்ளார். இதையடுத்து  அறையில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் படி தமிழக போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவரைப்பற்றிய தகவல்களை  வடமாநிலப் போலீஸாரிடம் இருந்து பெற்ற போது அவர் கூறியது உண்மை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து கந்தர்ப்பதாஸைக் கைது செய்த போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments