Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்
, வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:44 IST)
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதனையடுத்து ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
webdunia
இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் அந்தப் புயல் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமை நீதிபதியை சிக்க வைக்க பாலியல் சதியா ? விசாரிக்க குழு அமைப்பு