Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ’’டாஸ்மாக் பார்’’ திறக்க அனுமதி..மதுப்பிரியர்கள் உற்சாகம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (19:58 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது அரசு. தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் கூடிய பார்களுக்கு நாளை முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  சமூக இடைவெளியுடன் இருக்கைகள் இருக்க வேண்டும், அங்கு வருவோர்கு வெப்ப பரிசோதனை செய்யப்படும் என இதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்