‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனர் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானியா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:21 IST)
நாளில் விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண் இயக்குனர் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.  இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் இந்த செயற்கைக்கோளில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் சூரியனின் வெப்பநிலை உள்பட பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே  சந்திராயன் 3 விண்கலத்தில் 3 தமிழர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது ஆதித்யா எல் 1 விண்கலத்திலும் தமிழர் பணியாற்றி உள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments