’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:39 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே கலாச்சாரம் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
 
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments