Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பற்றி பேச கூடாது - சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:41 IST)
தனிப்பட்ட முறையில் ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது என சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேச்சு. 

 
நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நிலையில் அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அவர் திருப்பி அனுப்பிய நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். 
 
இன்று காலை 10 மணிக்கு கூடிய சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில்  நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் கடிதத்தின் தமிழாக்கத்தை முழுமையாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல. 
 
மேலும், தனிப்பட்ட முறையில் ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது எனவும் அதை நான் அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments