Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:34 IST)
நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து விளக்க கடிதத்தை பொதுவெளியில் பகிர்வது சரியா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பேசிய சபாநயகர் அப்பாவு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியது குறித்த கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலா என ஆளுனருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எந்த ஆளுனரும் இதை செய்ததில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments