Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 குண்டுகள் முழங்க 11 மணிக்கு எஸ்பிபி உடல் நல்லடக்கம்!

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (09:16 IST)
எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. 
 
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.
 
அவருடைய மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது.  
 
அங்கு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments