Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை அறிமுகப்படுத்திய எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தவாவது வருவாரா அஜித்..?

Advertiesment
தன்னை அறிமுகப்படுத்திய எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்தவாவது வருவாரா அஜித்..?
, சனி, 26 செப்டம்பர் 2020 (08:06 IST)
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.

அவருடைய மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். மனிதர்களின் மன நோய்க்கு மருந்தாக திகழ்ந்த எஸ்பிபியின் மறைவை இசை பிரியர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆனால், அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிகம் திரண்டதால் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் அஜித்தை திரையில் அறிமுகப்படுத்திய எஸ்பிபியின் உடலுக்கு ஆவது அஜித் அஞ்சலி செலுத்த வருவாரா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என பலதரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தை பெத்த அடையாளமே தெரியல அஞ்சனா... வியப்பூட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்!