Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எஸ் பி பி உடல்!

Advertiesment
பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எஸ் பி பி உடல்!
, வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:07 IST)
மறைந்த பாடகர் எஸ் பி பியின் உடல் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானார்.

அவரது மறைவு திரையுலகினரையும் லட்சக்கணக்கான இசை ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கம் கொண்டு செல்லப்படும் அவர் உடல் நாளை மதியம் செங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழு தலைமுறைக்கும் ’’அன்னைய்யா ‘’புகழ் வாழும் – எஸ்.பி.பியின் நீண்டகால நண்பர் கமல் டுவீட்