Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் பார்கள் திறப்பு எப்போது.? அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (17:28 IST)
டாஸ்மாக் பார்கள் திறப்பது எப்போது என்று குறித்த தகவலை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் 1200 க்கும் குறைவான பாதிப்பே தினசரி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் டாஸ்மாக் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பார்கள் திறக்கும் தேதியை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மேலும் இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் விற்பனை செய்யப் போவதில்லை என்றும் இனி வரும் காலங்களில் எந்தவித இலக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு நிர்ணயம் இருக்காது என்றும் அவர் கூறினார்
 
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments