Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில்பாலாஜிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அட்வைஸ்

செந்தில்பாலாஜிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அட்வைஸ்
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (00:51 IST)
அணில் கதையையும், பாம்பு கதையையும் சொல்லாமல் மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தினை வாங்கி தரவேண்டும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அட்வைஸ்
 
அன்று நீட் தேர்வு குறித்து வாய்திறக்காத திமுக இப்போது மட்டும் வாய் திறப்பது ஏன் ? அதுமட்டுமல்ல, தமிழகத்திற்கு நீட் தேர்வு வரவேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதாடி கொண்டு வந்தவர் அப்போதைய மத்திய நிதி அமைச்சரின் மனைவி நளினி சிதம்பரம்
 
கரூர் அருகே வெள்ளியணை பகுதியில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட அளவில் அதிமுக சார்பில் வர உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் செயல்பட வேண்டிய ஆலோசனைகள் குறித்த கூட்டம், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது பேசிய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேசிய போது, தற்போது நீட் குறித்து திமுக பேசுகின்றது. இந்த நீட் தேர்வினை கொண்டு வந்தது அன்றைய மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், அப்போதும், கூட்டணி கட்சியாக திமுக கட்சியும் தான், அப்போது, இந்த நீட் தேர்வினை கொண்டு வரும் போது வாய்திறக்காத இந்த திமுக கட்சியானது. இப்போது இந்த நீட் தேர்வினை வைத்து அரசியல் செய்கின்றது. மேலும், இந்தியா முழுவதும் நீட் தேர்வு சென்று கொண்டிருந்தது. அப்போது, அன்றைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், உச்சநீதிமன்றத்திற்கு சென்று தமிழகத்திற்கு நீட் தேர்வினை கொண்டு வந்தவர்., இத்தனை விவகாரங்களான துரோகங்கள் தமிழர்களுக்கு செய்து விட்டு, தந்தையும் மகனும், (அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும்) செய்து விட்டு, நீட் தேர்விற்காக தமிழக சட்டமன்றத்தில் திமுக அரசு தற்போது ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள். இது எல்லாமே ஒரு நாடகம் தானே தவிர, தமிழகத்தில், கருணாநிதியை தொடர்ந்து மு.க.ஸ்டாலினும் இன்றும் தமிழர்களை ஏமாற்றி கொண்டு தான் வருகின்றார்கள் என்று ஆதங்கத்தோடு முன்னாள் அமைச்சர் பேசினார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் தாலிக்கு தங்கம் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்ற அந்த திட்டத்தில், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண செலவிற்கு ரொக்கப்பணம் ஆகியவற்றைகளை அனைத்தும் தந்தவர். ஆனால்,. திருமண மண்டபத்தில் திருமணம் செய்தால் அவர்களுக்கு அந்த திட்டம் கிடையாது, கார் வைத்திருந்தால் கிடையாது, மாடி வீடு வைத்திருந்தால் கிடையாது. ஆகவே மக்களுக்கு எதுவும் வந்து சேரமுடியாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இதுமட்டுமில்லாமல் மின்சாரம் ஏன் துண்டிக்கப்படுகின்றது என்றால், நம்ம ஊர் அறிவாளி, (தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி). அணில் செல்வதினால், கரெண்ட் கட் ஆகின்றது என்கின்றார். ஆகவே இதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றும், அணிலுக்கு பின்னர் பாம்பு என்று கூறி வந்தார். மேலும், பின்னர் என்ன சொல்ல உள்ளார் என்பது தெரியவில்லை, இதுமட்டுமில்லாமல், எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு மின்சாரம் வாங்கி தான் கொடுக்கின்றது. எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை, ஒரிஸா மாநிலத்தில் முழுமையான மின்சாரம் இருந்தாலும் சரியான தொழிற்சாலைகள் இல்லை, இந்திய அளவில் மின்சாரத்தினை அதிக அளவில் உபயோகப்படுத்தும் மாநிலங்களில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் தான் அதிக மின்சாரம், அதை வாங்கி கொடுத்தாலும் சரி, மக்களுக்கு மின்சாரத்தினை கொடுக்க வேண்டும், அதை விட்டு விட்டு, அணில் கதைகளையும், பாம்பு கதைகளையும் சொல்லி வருகின்றார். ஆகையால் கண்டிப்பாக மக்களுக்கு திமுக அரசு மீது எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் புதுக்கதை விடுகின்றார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்