பதவி நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு.. செப். 9ல் என்ன நடக்க போகிறது?

Siva
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (08:25 IST)
அதிமுகவின் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்டம்பர் 9-ஆம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்தச் சந்திப்பின் போது, அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன், அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். 
 
சமீபத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுத்தார்.
 
பதவி நீக்கப்பட்ட செங்கோட்டையன் விரைவில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி செங்கோட்டையன் என்ன அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments