Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம்: நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:25 IST)
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனாவால் தந்தை தாய் என இருவரையும் இழந்த குழந்தையின் பெயரில் ரூபாய் 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் குழந்தைக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார் 
 
இந்த திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். நாளை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைக்கப் போவதாகவும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர் ரூபாய் ஐந்து லட்சத்தை டெபாசிட் செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கும் திட்டமும் நாளை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments