Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் பெற்றோரை இழந்த 1400 குழந்தைகள்! – தமிழ்நாட்டு ரிப்போர்ட்!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 11 ஜூன் 2021 (12:32 IST)
தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக குழந்தைகள் உரிமைகள் தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகளையும், நிவாரணங்களையும் அளித்து வருகின்றன. இந்நிலையில் மாநிலம் தோறும் பெற்றோரை இழந்த குழந்தைகள் விவரம் குறித்து குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 1400 குழந்தைகள் கொரோனாவால் தங்களது பெற்றோர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள், யாராவது ஒருவரை இழந்த குழந்தைகள் இரண்டையும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய நடிகை… தேச துரோக வழக்கு!