Publish Date: Thu, 03 Jun 2021 (10:31 IST)
Updated Date: Thu, 03 Jun 2021 (11:24 IST)
தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டத்தை துவங்குகிறார்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்களை ரேஷனில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இன்று கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த திட்டத்தில் கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, உளுத்தம் பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை 1/2 கிலோ, புளி 1/4 கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம் வழங்கப்பட உள்ளது. டீ தூள் 2 பாக்கெட், குளியல் சோப்பு 1, துணி சோப்பு 1, வழங்கப்படுகிறது.