Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாருக்கும் இடஒதுக்கீடு பெறுவதுதான் எனது இலக்கு! – ராமதாஸ் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:59 IST)
தமிழகத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கு 10.5% இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்றிய நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து நன்றி தெரிவித்து பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.

மேலும் “வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள்!” என தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் மற்ற பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடை பெற்று தர முயல்வதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments