Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோந்தா புயல்: சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்கான மழை எச்சரிக்கை..!

Advertiesment
மழை எச்சரிக்கை

Mahendran

, திங்கள், 27 அக்டோபர் 2025 (17:27 IST)
வங்கக்கடலில் 'மோந்தா' புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று இரவு  சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகும்.
 
'மோந்தா' புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. தற்போது இது சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் நாளை இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் தாக்கத்தால், இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!