Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக்கடலில் வலம் வரும் மோந்தா புயல்! நாகை - இலங்கை கப்பல் சேவை நிறுத்தம்!

Advertiesment
Passenger ferry

Prasanth K

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (09:26 IST)

வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகும் நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

நாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த 2023 முதலாக பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியர்களும், இலங்கை மக்களும் எளிதாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகிறது. இதனால் பயணிகள் நலன் கருதி இன்று முதல் டிசம்பர் மாதம் வரை நாகப்பட்டிணம் - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர புயலாக வலுவடையும் மோந்தா! எந்தெந்த மாவட்டங்களை வெளுத்து வாங்கப்போகுது மழை?