Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்திக்கும் தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (22:04 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்த நிலையில் அரசு பள்ளிகளிலும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறலாம் என அரசு அறிவித்துள்ளது 
 
ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சரை தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திக்கின்றனர். ஜூலை 6ஆம் தேதி தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கின்றனர் என்றும் இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை திறக்க முதலமைச்சரிடம் அனுமதி பெறலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்போவதாகவும் தெரிகிறது
 

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments