Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட ஒதுக்கீடு வந்ததும் ரிசல்ட் விடுங்க.. ஆளுனர் ஒப்புதல் இல்லை! – குழப்பத்தில் மருத்துவ படிப்புகள்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:25 IST)
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் 16ம் தேதி அதன் முடிவுகள் வெளியாக உள்ளன. முன்னதாக தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்றுவரை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மசோதாவை ஏற்று கையெழுத்திடாததால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு இந்த கல்வியாண்டில் வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments