Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் ஓட்டைப் பிரித்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை –போலிஸார் விசாரணை!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:12 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி கிராமத்தில் உள்ள 68 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி என்ற பகுதிக்கு அருகே கோரி காலணி என்ற பகுதி உள்ளது. அங்கு கணவரை இழந்த தனியாக வாழும் 68 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் குதித்து அந்த மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தனக்கு நடந்த கொடுமை பற்றி மூதாட்டி பலரிடமும் சொல்ல, அவர்கள் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்