Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா: உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (16:32 IST)
பார் கவுன்சில் தேர்தலில் நோட்டா பயன்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஆறுமுகம் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் பதிவிக்கான தேர்தல் வருகிற மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பலர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுபவர்களுக்கு ஓட்டுப்போட விரும்பாத நபர்கள் யாருக்கும் விருப்பமில்லை என்று பதிவு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். 
 
சட்டமன்ற, பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் நோட்டா உள்ளது. அதுபோல பார் கவுன்சில் தேர்தலிலும் நோட்டா வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் சிறப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பார்சில் கவுன்சில் தேர்தலில் நோட்டா வாய்ப்பை வழங்குவது குறித்து சிறப்புக் குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments