Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் அருகில் நிர்மலாதேவி - சந்தேகத்தை எழுப்பும் முருகனின் மனைவி

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (14:12 IST)
தனது கணவர் பேராசிரியர் முருகன் எந்த குற்றமும் செய்யவில்லை என அவரின் மனைவி சுஜா தெரிவித்துள்ளர்.

 
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், அவரை தவறு செய்ய தூண்டியதாக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஒரு சில தகவல்களை கூறினாலும், இதில் தொடர்புடைய முக்கிய விவிஐபிக்களின் பெயரை கூற மறுக்கிறார்களாம். அதாவது, யாருக்காக இதை செய்தார்கள் என்கிற முக்கிய தகவலை போலீசாரால் பெற முடியவில்லை எனத் தெரிகிறது.
 
இதனால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 4வது நாட்களாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தனது கணவர் முருகன் எந்த தவறும் செய்யாத அப்பாவி என அவரின் மனைவி சுஜா கூறியுள்ளார்.
 
என் கணவர் முருகன் நிர்மலா தேவியை 3 முறைதான் சந்தித்து பேசியுள்ளார். அதுவும் அலுவல் ரீதியாகத்தான் பேசினார். புத்தாக்கப் பயிற்சிக்கு அறை வசதிகள் செய்து கொடுத்தார். மேலதிகாரிகளை தப்ப வைக்க என் கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர். எனது கணவரை போலீசார் கைது செய்வதற்கு முன்பே எங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. உங்களை குண்டர் சட்டத்தில் போட்டு விடுவார்கள். உடனே தலைமறைவாகி விடுங்கள் எனக் கூறினர். இதற்கு பின் பெரிய சதி இருக்கிறது.  ஆளுநர் அருகே நிர்மலா தேவியை நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வைத்தது யார் என்பதை கண்டுபிடித்தால் உண்மை வெளியே தெரிய வரும்” என சுஜா கூறினார்.
 
அவரிடம் போலீசார் மற்றும் ஆளுநர் நியமித்த ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments