Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர தீபாவளிக்குள் சென்னையில் 5ஜி சேவை! – முகேஷ் அம்பானி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:41 IST)
இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வரும் ஜியோ சென்னையில் தீபாவளிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அடுத்ததாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்ற ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நிறுவனம் உள்ளிட்டவை 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் பெற்றுள்ளன.

இந்நிலையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் வேகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ் மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி “இந்த ஆண்டு தீபாவளிக்குள் இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, மும்பை ஆகிய மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்.

தொடர்ந்து 2023ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள், தாலுக்காக்களில் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். உலகின் அதிவேக இணையசேவையை ஜியோ பயனாளர்களுக்கு வழங்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments