Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்! – விடுமுறை அறிவிப்பு!

Onam
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (09:55 IST)
ஓணம் பண்டிகைக்காக சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை கேரள மக்களால் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கன்னியாக்குமரி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை பலரால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிக்கை செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 8ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அன்று செயல்படாது.

உள்ளூர் விடுமுறையை நிகர் செய்யும் விதமாக செப்டம்பர் 17ம் தேதியன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னஞ்சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து வன்கொடுமை! – பள்ளி ஆசிரியர் கைது!