Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 600 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பள்ளிகல்வித்துறை அதிரடி

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (09:59 IST)
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்க செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்த அரசு ஊழியர்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
 
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரகியாக உத்தரவிட்டுள்ளது. அரசு எங்கள் மீது இதே மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்தால் எங்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.
 
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments