Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடை ரெடியா? தொடங்கியது மழை சீசன்! – 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (08:12 IST)
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரமாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments