Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்திலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை! – இன்று எங்கெங்கு மழை வாய்ப்பு!

தமிழகத்திலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை! – இன்று எங்கெங்கு மழை வாய்ப்பு!
, செவ்வாய், 31 மே 2022 (13:17 IST)
தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கோடைக்காலம் நடைபெற்று வந்த நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது. தற்போது கோடைக்காலம் முடிவை நெருங்கியுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுதாக படித்துவிட்டுதான் முடிவெடுத்து வருகிறோம்! – ஆளுனருக்கு அமைச்சர் பொன்முடி பதில்!