Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
, திங்கள், 4 ஜூலை 2022 (12:45 IST)
இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் ஜூலை 7 ஆம் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கலில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிரமாக பரவும் காலரா! தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?