Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடைப்பெற்றது வடகிழக்குப் பருவமழை !!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:30 IST)
இன்றுடன் வடகிழக்குப் பருவமழை முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்றுடன் வடகிழக்குப் பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments