Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை: ஈபிஎஸ் தடாலடி!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (13:03 IST)
சசிகலா சிறையில் இருந்து வருவதால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது என எடப்பாடி பழனிச்சாமி தகவல். 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நலப்பணி திட்டங்களுக்காக மத்திய அரசிடம் நிலுவை தொகையை வழங்க அவர் வலியுறுத்த உள்ளதாக ஒருபுறம் பேசிக்கொள்ளப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் கூட்டணி குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில் முதல்வரின் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே முதல்வர் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்க சென்றுள்ளார்” என கூறியுள்ளார்.
 
இதனிடயே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா சிறையில் இருந்து வருவதால் அதிமுகவில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. ஜெயலலிதா இருந்த வரை சசிகலா அதிமுக கட்சியில் கூட இல்லை. சசிகலா தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே தெளிவாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments