Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதேபோல மற்ற 6 பேரையும் விடுவிப்போம்! – பேரறிவாளனுக்கு முதல்வர் வாழ்த்து!

Webdunia
புதன், 18 மே 2022 (12:54 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் “31 ஆண்டு சிறைவாசம் முடிந்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிவாளன் என்ற தனி மனிதனின் விடுதலையாக மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு. இதேபோல சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments