Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ முன்னிலையில் மதிமுக-நாம் தமிழர் தொண்டர்கள் மோதல்: உசிலம்பட்டியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (21:28 IST)
நியூட்ரியோனா திட்டத்தை எதிர்த்து நடைப்பயணம் செய்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உசிலம்பட்டிக்கு வருகை தந்தார்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பெருங்காமநல்லூர் என்ற பகுதியில், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களின் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சிலர் அந்த பகுதியில் இருந்தனர்.

அவர்களை பார்த்த வைகோ, எனது சாதியைச் சொல்லி மீம்ஸ் போடுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்றும், எதற்கும் துணிந்தவன் வைகோ என்பதை சீமானிடத்தில் செல்லுங்கள் என்று, எச்சரித்தார்

இதனால் ஆத்திரம் அடைந்த  நாம் தமிழர் கட்சியினர் வைகோவை வெறுப்பேற்றும் வகையில் வீரவணக்கம் வீரவணக்கம் என முழக்கமிட்டனர். இதனால் எரிச்சலடைந்த  வைகோ, நாம் தமிழர்கள் தொண்டர்களை நோக்கி  கையால் சைகை காட்டி எச்சரித்தார். இதனையடுத்து, மதிமுக - நாம் தமிழர் தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் இருதரப்பினரகளையும் சமாதானம் செய்து பின்னர் வைகோவை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments