Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் அற்புதம்மாள் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலையா?

அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் அற்புதம்மாள் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலையா?
, வியாழன், 15 மார்ச் 2018 (09:39 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல்காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை தானும் தன்னுடைய சகோதரி பிரியங்காவும் மன்னித்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்திற்கு தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு அற்புதம்மாள் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனால் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர்  விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களை அற்புதம்மாள் சற்று முன்னர் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018-19 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் - உடனுக்குடன்