Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ கமெண்ட்ஸ்... மதுரையை டீலில் விட்ட சிட்டி அமைச்சர்!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:57 IST)
மதுரையை 2வது தலைநகரமாக்க விரும்புவது தென்மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து. 
 
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தமிழக தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில் அனைத்து துறை செயல்பாடுகளும் சென்னையிலேயே நடைபெற்று வருவதாலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் புதிய தலைநகர் மாற்றுவது குறித்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.  
 
இந்நிலையில் மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுகவிற்குள்ளே மதுரை 2வது தலைநகராக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
ஆம் இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, மதுரையை 2வது தலைநகரமாக்க விரும்புவது தென்மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை. 2வது தலைநகர் கோரிக்கை குறித்து முதல்வர் முடிவெடுக்கும் வரை எங்களுக்கு இதில் எந்த நிலைப்பாடும் கிடையாது என அதிரடியாக பேசியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments