Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகள் திறக்கப்படுமா? மாணவர்களுக்கு குஷியான் செய்தி சொன்ன அமைச்சர்!!

Advertiesment
அமைச்சர் செங்கோட்டையன்
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:26 IST)
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு என அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை. அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் கடந்த ஜூன் மாதமே இந்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை. 
 
ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகி விட்ட நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு என தெரிவித்துள்ளார். அதேபோல டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சி தலைமையில் காந்தி குடும்பம் கிடையாது! – பிரியங்கா காந்தி உறுதி!