7 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சிறையில் பணிபுரிவோர் பட்டியல்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Mahendran
வியாழன், 11 செப்டம்பர் 2025 (12:17 IST)
தமிழ்நாடு சிறைத்துறையில், 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 
சிறைத்துறையில் இரண்டாம் நிலை வார்டனாக பணிபுரியும் ரமேஷ் என்பவர், மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தன்னை பணிமாறுதல் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் அரசுத் தரப்பு, "மனுதாரர் ஒரே மாவட்டத்திற்கு உட்பட்ட சிறைகளில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். எனவே, நிர்வாக வசதிக்காகவே அவர் பணிமாறுதல் செய்யப்பட்டார்" என்று விளக்கம் அளித்தது.
 
அரசு தரப்பின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிறையில் பணிபுரிந்து வரும் அனைவரும் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்த பட்டியல், சிறைத்துறை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக கோரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments