Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் மையம்.. திமுகவின் பதில் என்ன?

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (10:14 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக கூட்டணியில் அக்கட்சி இரண்டு தொகுதிகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மற்றும் தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கமல் கட்சி கேட்க இருப்பதாகவும் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி கொடுக்க  முடியாத நிலையில் தற்போது புதிதாக கமல் கட்சியும் இணைந்துள்ளது மட்டுமின்றி இரண்டு தொகுதிகள் கேட்பது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு தொகுதி மட்டுமே கமல் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றும் திமுக பிரமுகர்கள் கூறுகின்றனர்.

ஒரு தொகுதிக்காக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இணையுமா அல்லது மாற்று முடிவு எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments